search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம் அறிவிப்பு"

    கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்காவிட்டால் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #StalinProtest
    சென்னை:

    திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், அணையின் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என கூறினார். மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்று குற்றம்சாட்டினார்.



    இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேர அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் திமுக சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் ஆட்சியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டமாக அமையும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். #MKStalin #StalinProtest 
    ×